search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.

    தேனி:

    மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.

    கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.

    பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

    அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் மனு
    • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

    இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர்.
    • போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). இவர் பைனான்ஸ் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது சகோதரர் சிவசங்கர் (44). ராதா கிருஷ்ணனிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தவர் திண்டல் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்தார் (44).

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வில்லரசம்பட்டியில் உள்ள தோட்டத்தில் சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவசங்கர், சர்தாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சிவசங்கருடன் இருந்த ஈரோடு காரப்பாறையை சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ் பாண்டி (35) என்பவர் சர்தார் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த சர்தார் மகன் சபீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகராறு முடிந்த பிறகு சந்தோஷ்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் பழையபாளையம் அருகே சென்ற போது சர்தார், அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து, சந்தோஷ் பாண்டியை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சந்தோஷ் பாண்டி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் பாண்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சபீர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சந்தோஷ்பாண்டியின் பிரேத பரிசோதனை இன்று பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவரது வீட்டின் அருகே உலக்காசி சாலையில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் இன்று காலை செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதைக்கண்டு பதறிப்போன அந்தப் பகுதி பொதுமக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வராஜ் உடலில் தலை தொங்கியபடி இருந்தது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று செல்வராஜ் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அடிதடி உண்டானது. இந்த தகராறு காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் செல்வராஜுக்கு வேறு ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது கடைசி மகனான ராமு என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்துள்ளார். சொந்த வீடு இருக்கும் காரணத்தால் அதில் வரும் வாடகையை வைத்து எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த ராமுவை மது பாட்டில் மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜாம்பஜார் போலீசார் கொலை செய்யப்பட்ட ராமுவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமு என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் மாயாண்டியையும், சிறுவனை கைது செய்தனர்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர்கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பூதத்தான். இவரது மகன் பிரபு(வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(29). கூலி வேலை பார்க்கும் இவரும், பிரபுவும் நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் புதிதாக ஒருவர் கட்டிவரும் வீட்டில் வைத்து மது அருந்தினர். அப்போது மாயாண்டியின் உறவினர் மகன் உள்பட மேலும் 2 சிறுவர்களும் அவர்களுடன் இருந்துள்ளனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த பிரபுவை சிறுவர்களுடன் சேர்ந்து மாயாண்டி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதிஷ்குமார் அங்கு வந்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர்கள் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபு கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பிரபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனை கைவிடுமாறு அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரித்தும், அவர்கள் 2 பேரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மாயாண்டியிடம் தெரிவிக்கவே, அவர் பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவரை மது குடிக்க அழைத்து சென்று அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து அவரை போதையடைய செய்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரபுவை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாயாண்டியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள எருமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (37). விவசாயியான இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    முத்துராஜ் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் முத்துராஜை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் முத்துராஜை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் முத்துராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது குறித்து மல்லூர் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் அவிநாசி பகுதியில் சுற்றி திரிந்து வந்ததுடன், பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் அவிநாசி பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிட செல்வது வழக்கம்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் இறந்து கிடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர், நேற்று அந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்றதும், அப்போது அங்கு ஒரு பெண், 2 வாலிபர்கள் தட்டிக்கேட்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதும், பின்னர் 3பேரும் சேர்ந்து வாலிபரை அங்கிருந்து வெளியேற்றியதும் தெரியவந்தது. இந்த தகராறு காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    எனவே இந்த பிரச்சனையில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வாலிபர்கள் 2பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    ×